குன்சு

சீனாவில் உள்ள குன்சு மாகாணத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றால் சொந்த வீட்டுக்கு மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடு காரணமாக மகப்பேறு எண்ணிக்கை குறைந்ததால் சீனாவில் இளைஞர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.  எனவே அங்குக் குழந்தைகள் பெறுவதை அரசே ஊக்குவிக்கிறது.  அவ்வகையில் சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தது.  இதையொட்டி ஒவ்வொரு மாகாணமும் 2 அல்லது 3 குழந்தைகள் பெறுவோருக்குச் சலுகைகள் அளித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணம் இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு அந்தக் குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை மாதம் 500 யுவான் பராமரிப்பு தொகை அளிக்கப்படும் என்று அறிவித்தது.

தற்போது குன்சு மாகாணம் 2 இரண்டு அல்லது 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் 40,000 யுவான் (6,211 அமெரிக்க டாலர்) மானியமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. தம்பதியர் இந்தப் பணத்தைக் கொண்டு வீடு வாங்கலாம். அத்துடன் குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 10,000 யுவான் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் 11 சலுகைகள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீனாவின் பீகிங் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மூ குவான்சாங், ”குன்சு மாகாணத்தின் லின்சி கவுன்ட்டியின் இந்த அறிவிப்பு மற்ற மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகும் .இந்த திட்டத்தைக் கிழக்கு சீனாவின் மற்ற நகரங்களும் பின்பற்றும் என நம்பிக்கை இருக்கிறது” என்று கூறி உள்ளார்.