சென்னை

மூத்த பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்..

நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி செய்தியாளர்களிடம்,

”இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். சென்ற முறை கிடைத்த 300 தொகுதிகளில் இருந்து 25 சீட்கள் குறைவாக 275 சீட்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். தமகத்தில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் ஜெயிக்கலாமே தவிர மற்ற வேட்பாளர்கள் பற்றி தெரியாது. தமிழகத்தில் ஒரு சீட்டுக்கு மேல் கிடைக்குமா? என்பதை சொல்ல முடியாது. 

கட்சிக்குள் யார் பிரதமராக இருப்பார்? என தேர்தல் நடக்கவில்லை. பிரதமர் யார்?  வேட்பாளர்கள் ஜெயித்து வந்த பின்தான் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதைக் கட்சி எம்.பிக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என்னை பாஜக எம்.பி.க்கள் என்னை பிரதமராக இருக்க சொன்னால் ஏற்பேன்.  ஏற்கனவே மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துவிட்டதால் இந்த முறை வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

இந்தியாவிடம் இருந்து சீனா 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடத்தை எடுத்து விட்டதை மறைத்துவிட்டனர். இந்தியாவ்க்கு எந்த பெரிய நாடும் உதவியாக இல்லை. அமெரிக்காவும் எதிரியாகி விட்டது. மோடி என்ன சொல்கிறார்? என்பதை பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையைத்தான் பார்க்க வேண்டும். சொந்த காலில் நின்று சீனாவை தோற்கடித்து வெளியேற்ற வேண்டியதுதான் முக்கியம். 

தேர்தல் அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளது.. தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரவேண்டும். தற்போது நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது.  இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய முழுத் தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது”.

என்று கூறினார்.