நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு நூதனை தண்டனை வழங்கப்பட்டது.

காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் சிறார் நீதி குழும நீதிபதிகள் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.

நெல்லை அரசு   மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர்,   இருதரப்பையும் சேர்ந்த 15  மாணவர்களை  கைது சிறார் சிறை என கூறப்படும்  கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், இந்த மோதல் நடைபெற்ற இடமானது  நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்பது தெரிய வந்துள்ளது.  அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.

அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர்களை விசாரித்த நீதி குழும நடுவர்கள்  அவர்களுக்கு பல்வேறு  அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.

ஏற்கனவே சாதிய மோதல் காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு வெட்டி, ஆசிரியருக்கு வெட்டு என நெல்லை மாவட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மாணவர்களிடையே கோஷ்டி மோதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

[youtube-feed feed=1]