ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது  ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜே & கே மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய இடங்களில் 5.7 ரிக்டர் அளவுகோளில்  வலுவான நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கமானது இன்று காலை 9.45 மணி அளவில் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தானை எல்லையோர மண்டலத்தில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த நிலநடுக்கம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.