அரசன்2
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.   வெல்லுகிற சொல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த ராஜா காலத்து கதை.
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐயாயிரம் பொற்காசுகள்  அளித்தார்.
இதைப் பார்த்த மகாராணி ‘ அய்யோ… ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள்” என்று ஆத்திரப்பட்டாள். .
‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று மன்னர் மறுத்தார். ‘சரி, அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் ‘இது ஆணுமில்லை பெண்ணுமில்லை’ இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம் பொற்காசுகளை மீனவனுக்கு அளித்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி ஆத்திரமும், ஆதங்கமுமாக, “’பேராசைக்காரன்…! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்’ என்றாள் மன்னரிடம்.
மீனவனஅ  நிதானமாக, “நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது’ என்றான்.
இதனால் மேலும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம்  பொற்காசுகளை அவனுக்கு கொடுத்தார். இப்பொழுது மகாராணி, திகைத்துப் போய் நின்றாள்.
ஆகவே நண்பர்களே.. அரசியல்வாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த மீனவன் அளவிற்காவது பேசக்கற்றுக்கொள்ள வேண்டும்.