டில்லி

ன்னும் 11.48 பான்கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை வருமான வரி கணக்கு தாக்கல், வங்கிக் கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய அனைத்து தேவைகளுக்கு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. ஒருவரே பல்வேறு பான் காா்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் பான் காா்டை ஆதாருடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

மக்களவையில் பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில்,

“கடந்த 2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு பான்-ஆதாா் இணைப்பவர்களுக்குத் தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அவ்வகையில், 2023 ஜூலை 1 முதல் 2024 ஜனவரி 31 வரை ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் 11.48 கோடி பான் காா்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன”

என்று தெரிவித்துள்ளார்.