சென்னை:
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில், துணைகுடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்டு கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும்
கருணாநிதி திருவுருவச்சிலை திறப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு விழா பேருரையாற்றவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதி கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.