புதுடெல்லி:

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராத சர்க்கரை ஆலை உரிமையாளர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.


மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அளித்த பதிலில், 2017-18 ம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.85,179 கோடியாக இருந்தது.

கரும்பு அறுவடை முடியும் நேரத்தில் இந்த நிலுவைத் தொகை ரூ.303 கோடியாக குறைந்துள்ளது.

நடப்பு பருவத்தில், கரும்பு விவசாயிகளுக்கு தர சர்க்கரை ஆலைகள் தர வேண்டி நிலுவைத் தொகை ரூ.85,355 கோடியிலிருந்து ரூ.67,706 கோடியாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலுவைத் தொகையே இருக்காது என்று நினைக்கின்றோம்.

நிலுவைத் தொகை முற்றிலும் தராவிட்டால், சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்பும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றார்.