சென்னை: வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் ஊதியம் பிடித்தம் இல்லாமல் விடுமுறை வழங்க வண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, இம்மாதம் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்  வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும்  என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19 ஆம் தேதி , தேர்தலையொட்டி, அரசு பொதுவிடுமுறை அளித்துள்ள நிலையில் விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தமோ சம்பளக் குறைப்போ இருக்க கூடாது எனவும், அவர்களுக்கு ஊதியதுடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது. அரசின் உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.