சென்னை:
த்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில், டோக்கியோ – சென்னை இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், சிங்கப்பூர் – மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், சிங்கப்பூர் – மதுரை இடையே தினசரி குறைந்தபட்சம் ஒரு விமானமாவது இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.