திருச்சி

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரச் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் ஆகும் . ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சுவர்கள் சில தினங்களாக விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டன.

எனவே அங்கு விரிசல்களை சரிசெய்ய வேலைகள் நடைபெற்று வந்தன. நள்ளிரவு 1.50 மணி அளவில் விரிசல் ஏற்பட்டிருந்த கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை சுவர் இடிந்து விழுந்தது.  சுவர் நள்ளிரவு நேரத்தில் இடிந்ததால் அங்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

பக்தர்கள் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில் சுவர் இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..