ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் மாநிலத்தல் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  ஸ்ரீநகர் அருகே நவ்கம் பகுதியில் 3 பயங்கரவாதி களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர்.

முன்னதாக  ஸ்ரீநகர் நகரின் புறநகர்ப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்ற  பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அதைத்தொடர்ந்து, காவல்துறையினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

இதை காஷ்மீர் போலீசார் டிவிட் பதிவிட்டு உறுதி செய்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட  3 பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அவர்களிடம் இருந்து  ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட குற்றசாட்டு பொருட்கள் மீட்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.