மும்பை

இலங்கையில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணத்தில் அணித் தலைவராக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  அப்போது 3 ஒரு நாள் போட்டிகளும் 3 டி 20 போட்டிகளும் இலங்கையுடன் விளையாடுகிறது.  வரும் ஜூலை 13, 16,19, 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகள் கொழும்பு நகரில் உள்ள  பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.  இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அணியின் துணைத் தலைவராக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.