சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான  அகதிகள் முகாம்கள், இனிமேதல்  மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கpளன் பெயர்கள் மாற்றப்படுவதாகவும், “தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்.மேலும், இலங்கை தமிழருக்காக நாம் இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது, விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக ரூ.317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இந்த நிலையில், இன்றைய விவாதத்தின்போது, அகதிகள் முகாமை, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்கள் என மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.