ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  நாகை, கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த   தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளை யர்கள். தாக்கிய அவர்களிடம் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நாகை கோடியக்கரை பகுதிக்கு வந்த கடற்கொள்ளையர்கள்,  அங்கு மீன்பிடித்துக்கொண்டருந்த  தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி விட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்  சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட 9 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொள்ளையர்கள், தமிழக மீனவர்களின்  ரூ.5 லட்சம் மதிப்புள்ள  700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலியை பறித்து சென்றதுடன், தமிழக மீனவர்களை கடலில் தள்ளி சித்திரவதை செய்ததாக நாகை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.