ராமநாதபுரம்: வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டுவதும் தொடர்கதையாகிறது. இதில் முழுமையான முடிவு எடுக்க முடியாத நிலையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 70-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். பல விசைப்படகுகளும் அங்கு கேட்பாரின்றி, சேதமடைந்த நிலையில், கிடக்கிறது. இதனால் தமிழன மீனவர்களுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது. அந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.