சென்னை
தெற்கு ரயில்வே மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் – மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதாவது தாம்பரத்தில் இருந்து இன்று (மே 10) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக மே 12-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.