சென்னை:
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற விரும்பும் நபர்கள், அரசாணை வெளியிட்டப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.