சென்னை:
சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னயில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், சாலை மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட்டும் என்றும், “கத்திப்பாரா அருகே தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.