டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு மே 30ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை  சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்வதற்கான தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர்  ப.சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  ஆகியோர்மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக  சிபிஐ, அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  வழக்கில், கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் கடந்த ஆண்டு ஜூன் மாதமே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில்  வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி மன்றம், வழக்கை மே 30ந்தேதிக்கு தள்ளி வைத்த நிலையில், அதுவரை சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.