சென்னை

ன்று முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இருந்து கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் வசதிக்காகச் சிறப்பு பேருத்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

“இன்று முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதாரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.

வரும் 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்புப் பேருந்து வாடகைக்கு விடப்படும்.”

என்று கூறப்பட்டுள்ளது.