வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா….. பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்*

தைப்பூச சிறப்புப் பதிவு – 3

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்……!

🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபு தி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்குச் சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபுதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற பிரசாதம் அது கிடைப்பது மிகப் புண்ணியம்.

🌹 ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

🌹 அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ,  பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

🌹 இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.

🌹 விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்குச் சந்தனம் வைக்கப்படும். முன்பு சந்தனக் காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பிறகு இந்த முறை மாற்றப்பட்டது.

🌹 விக்ரகம் மிகுந்த சு டாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

🌹 தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

🌹 அந்த சிலையைச் சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

🌹 இந்த சிலையைப் போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.

🌹 அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்குப் பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையைச் செய்ய முயற்சி எழுத்தாகவும், இதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளைப் பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தைப் போகர் சொற்படி தயார் செய்தனர்.

🌹 போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்குப் பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

🌹 கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.

🌹 தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாகச் சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தைத் தரிசிக்க முடியாது.

🌹 பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது…