சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிரான Speakin4India என்ற பெயரில் ஆடியோ பிரசாரத்தை முன்னெடுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குரல் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் பதிவு வெளியிட்டார். பா.ஜ.க. தேர்தலுக்கு முன்பு கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்தில், ‘SpeakingforIndia’ என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை தொடங்கினார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். அதாவது, (PODCAST) ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், Speaking for INDIA என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் முதல் ஆடியோ தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது ‘Speaking 4 India Podcast’ மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில்,   இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது.

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது. குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், இப்போது என்ன மாடல் என தெரியாமலேயே முடியப் போகிறது. வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ ரி​லீஸ் ஆடியோ பதிவு speaking4india.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

#Speaking4India வலையொலித் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண/கேட்க பார்வையிடவும்: speaking4india.com