சென்னை: தமிழக சட்டமன்ற புத்தாண்டு கூட்டத்தொடர் வரும் 5ந்தேதி தொடங்க உள்ள நிலையில், மாநில ஆளுநர் ஆர்.என் ரவியை சட்டப்பேபேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு  அழைப்பு விடுத்தார்.

புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், ஜனவரி 5ந்தேதி கூடும் என்றும், இந்த கூட்டத்தொடரும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை  கலைவாணா் அரங்கத்திலேயே நடத்தப்படும் என்று பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் அறிவித்துள்ளாா்.

ஆண்டின் முதல்கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையாற்றுவத மரபு. அதன்படி, ஜனவரி 5ஆம் தேதி தமிழக சட்டப்பபேரவையில்  ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு ஆளுநர் உறையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் ரவி சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும்படி, பேரவைத் தலைவர் அப்பாவு இன்று நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.