சென்னை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் 27-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வரும் 27-ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.