டில்லி:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது அந்தமானின் கடல் பகுதியில் நிலவி வரும் சாதகமான சூழலை தொடர்நது அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என்றும், . வரும் 29 ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்க வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் மழை பெய்யும் என்றும், இந்த மழைப்பொழிவானது வழக்கமான காலகட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலேயே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடற்பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர இருப்பதாகவும், இதன் காரணமாக இந்திய பகுதிகளில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.