சென்னை

தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.  இதையொட்டி தமிழக அரசு பல சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.  அதை போல் தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த ரயில்கள் விவரம் வருமாறு

1.     ரயில் எண் 06037 / 06038 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர்  அதிவிரைவு, சிறப்புக் கட்டண சிறப்பு ரயில். ரயில் எண் 06037, நவம்பர் 3 ஆம் தேதி இரவு 10.05 மணிக்குச் சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை அடையும். ரயில் எண் 06038ம் நவம்பர் 5 ஆம் தேதி பிறபகல் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நவம்பர் 6 ஆம் தேதி காலை 5.20 மணிக்குச் சென்னை எழும்பூரை அடையும்.

2.     ரயில் எண்: 06040 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம் வாயிலாகத் தாம்பரம் சென்றடையும்). இந்த ரயில் நவம்பர் 7 மாலை 7 மணியளவில் திருநெல்வேலியில் புறப்பட்டு மறுநாள் நவம்பர் 8 காலை 7.55 மணிக்குத் தாம்பரத்தை அடையும்.

3.      ரயில் எண் 06049: தாம்பரம் திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில். (விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி வாயிலாக நெல்லை சென்றடையும்) நவம்பர் 8 ஆம் தேதி மாலை 4.00 மணிக்குத் தாம்பரத்தில் புறப்பட்டு நவம்பர் 9 அதிகாலை 3 மணியளவில் நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.