சென்னை

தெற்கு ரயில்வே 50 சிறப்பு ரயில்களை கோடைக்காலத்தை முன்னிட்டு இயக்குகிறது.

ரயில் பயணிகளின் வசதிக்காகக் கோடைக் காலத்தில் ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6,369 பயணங்களை இயக்குகிறது.கடந்த 2022-ல் இயக்கப்பட்ட மொத்த கோடைக் கால சிறப்பு ரயில்களுடன் (4599 பயணங்கள் 348 ரயில்கள்) ஒப்பிடும்போது, ரயில்வே இந்த ஆண்டு 1770 முறை கூடுதலான பயணங்களை இயக்குகிறது.

முக்கிய இடங்களான பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், டெல்லி – பாட்னா, புதுடெல்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இதில் தெற்கு ரயில்வேவில் 50 சிறப்பு ரயில்கள் மூலம் 244 பயணங்கள் இயக்கப்படவுள்ளது. அதாவது தாம்பரம் – நெல்லை, தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – வேளாங்கண்ணி, திருவனந்தபுரம் – மங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.