ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல, இறுதிநாளில் தென்னாப்பிரிக்க அணிக்கு 243 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.

நான்காம் நாள் 3வது செசஷனில், 370 ரன்கள் எடுத்த வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 272 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 298 ரன்களும் எடுத்தது.

தென்னாப்பிரிக்கா தாக்குப்பிடிக்குமா என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், டீன் எல்கர் 17 ரன்களில் ஆட்டமிழக்க, எய்டன் மார்க்ரம் மற்றும் வான் டெர் டுசேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்க்ரம் 59 ரன்களை எடுத்திருக்க, டுசேன் 48 ரன்களை எடுத்துள்ளார்.

நாளை ஒரு முழுநாளின் ஆட்டம் மிச்சமிருக்கையில், தென்னாப்பிரிக்கா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.