மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியொன்றில், பாகிஸ்தானை 17 ரன்களில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது. அந்த அணியின் லாரா அதிகபட்சமாக 53 ரன்களையும், மாரிசேன் காப் 31 ரன்களையும் அடித்தனர்.

பின்னர், எட்டக்கூடிய எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே அடித்தது.

அந்த அணியின் அலியா ரியாஸ் அதிகபட்சமாக 39 ரன்களையும், கேப்டன் ஜவேரியா கான் 31 ரன்களையும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள், ஒருநாள் போட்டியைப் போல் ஆடி, பந்துகளை வீணாக்கினர். இதனால், 119 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.