சென்னை

தெற்கு ரயில்வே சென்னையில் கூடுதலாக ஒரு ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

தினசரி சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 19-ந்தேதி கொளுத்தும் வெயிலை சமாளிக்க கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரயிலில் குறைந்தது ரூ.35-ம், அதிகபட்சம் ரூ.105-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் மத்தியில் இந்த ஏ.சி.மின்சார ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் இந்த  ஏ.சி. மின்சார ரயில் சேவை நாள் தோறும் 3 வேளைகளில் மட்டுமே இயக்கப்பட்டது. பிறகு, பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது ஒரு நாளைக்கு 8 வேளைகள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நடப்பாண்டு 10 ஏ.சி. மின்சார ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், ஒரு ரயில் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதாக இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

ரயில்வே அதிகாரி ஒருவர் இதுகுறித்து,,

“ஏ.சி. மின்சார ரெயில் சேவையை ஆரம்பத்தில் பொதுமக்கள் குறைந்த அளவே பயன்படுத்தி வந்தனர். ஆனால், சேவை எண்ணிக்கையை அதிகரித்த பின்னர் தற்போது நாள்தோறும் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவையை இயக்குவது மற்றும் கட்டணம் குறைப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.”

என்று தெரிவித்துள்ளார்.