டில்லி

விரைவில் அனைத்து வங்கிகளுக்கும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு 2 தின  ங்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் முதலாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக உள்ளது. மேலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறையாக உள்ளது. ஆயினும், பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர் சங்கத்தினர், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வங்கிகள் கூட்டமைப்பு இதை ஏற்றுக் கொண்டு ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதியமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. நிதியமைச்சகம் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தால், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும்.

வாரத்தில் சனிக்கிழமைகள் விடுமுறை காரணமாக, மற்ற தினசரி 5 வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஊழியர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கை நிதியமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் எனச் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.