புதுடெல்லி:
னாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அணுகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக என்சிபி தலைவர் சரத் பவார், மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை அணுகினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கு எந்த குறிப்பிட்ட பெயரையும் காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்கவில்லை. தேசத்தின் நலனுக்காக நமது வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் உயர வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.