புதுடெல்லி:
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உடலநலப் பாதிப்பு காரணமாக கடந்த 12ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்புக்கு பிந்தைய பூஞ்சை தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உடல் நிலை குணமடைந்ததை அடுத்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனால், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு ஆஜராவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.