சூரத்: பாலியல் முறைகேட்டில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்துவரும் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும், தற்போது சூரத் நீதிமன்றத்தால் பாலியல் முறைகேட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 30ம் தேதியன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சகோதரிகளை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், நாராயண் சாயிக்கு எதிரான 53 ஆதாரங்களை நீதிமன்றம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், நாராயண் சாய் தலைமறைவானார். ஆனால், 2 மாதங்கள் கழித்து அவர் டெல்லி – ஹரியானா எல்லையில் வைத்து காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

மேலும், சிறை அதிகாரிகளுக்கு ரூ.13 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டிற்கும் இவர் ஆளானார். இந்த வழக்கில் மட்டுமே இவரால் பெயில் பெற முடிந்தது.