சென்னை:
மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில், கோயம்பேடு, அசோக் பில்லர், ஆலந்தூர் உள்ளிட்ட 20 மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்திக்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்கபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.