கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான நுஸ்ரஜ் ஜஹானின் கணவர் நிகில் ஜெயினிடம், விரும்பிய செல்ஃபோன் எண் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.45000 மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நுஸ்ரத் ஜஹானின் கணவர் நிகில் ஜெயின் ரங்கோலி சாரீஸ் இயக்குநர். தனக்கு விருப்பான ஃபேன்ஸி மொபைல் எண் பெற்றுத் தருவதாக கூறி, சிலர் தன்னிடம் ரூ.45000 மோடி செய்துள்ளார் என்று காவல்துறையில் புகாரளித்துள்ளார் நிகில் ஜெயின்.

இவரின் புகாரை பெற்றுக்கொண்ட கொல்கத்தா காவல்துறையின் சைபர் செல் பிரிவு, இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்த விஷயத்தில் நிகில் ஜெயின் மட்டும் ஏமாறவில்லை.

ஃபேன்ஸி அல்லது விஜபி மொபைல் எண் வாங்கித் தருவதாக கூறிய கும்பலிடம் பல கொல்கத்தா வாசிகள் ஏமாந்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

உப்புநீர் ஏரி அருகே, இதுபோன்ற ஃபேன்ஸி மொபைல் எண் தொடர்பாக ஒரு கும்பலை டெல்லி காவல்துறை மடக்கிப் பிடித்த 4 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்தப் புகார்கள் வெளிவருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.