சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியேச் சென்றவர்களிடம் இருந்து இதுவரை (29ந்தேதி காலை 9 மணி நிலவரப்படி)  5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ. 15,99,65,345 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,71,492 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,61,118 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை   6,96,583 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 15,99,65,345 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.