பாதிப்பு அதிகம் உள்ள அண்ணாநகர் மண்டலத்தில் 44 முகாம்களும், தேனாம்பேட்டையில் 51 முகாம்களும், அடையாறில் 42 முகாம்களும் நடந்துள்ளன.
பாதிப்பு குறைவாக இருக்கும் தண்டையார் பேட்டையில் 39, ராயபுரம் 33, திரு.வி.க.நகர் 38, அம்பத்தூர் 33, ஆலந்தூர் 34, கோடம்பாக்கம் 36 முகாம்கள் நடந்துள்ளது. தற்போது நோய் பாதிப்பு குறைந்து வருவதால் காய்ச்சல் முகாம்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளன. தற்போது 11 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் அதிகபட்ச மாக 7 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.
கண்ணப்பசாமி நகர் 22-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெரு, ஐயப்பன் நகர் 3-வது கிராஸ் தெரு, வாசுதேவன் கார்டன், வ.உ.சி.தெரு, ஏழு மலைநகர், பி.ஆர்.எச். ரோடு ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டையில் 2 இடங்களும், வளசரவாக்கம், சோழிங்கநல்லூரில் தலா 1 இடமும் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது.
15 மண்டலங்களில் 4 மண்டலத்தில் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 11 மண்டலங்கள் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.