அமேதி தொகுதி எம்.பி. யாக உள்ள ஸ்ம்ரிதி இரானி அங்குள்ள பிரபல அஷ்ரபி லால் லஸ்ஸி கடையில் லஸ்ஸி குடிக்கச் சென்றார்.

அப்போது அந்த கடை முதலாளியிடம், (இந்த தொகுதி எம்.பி.யான தன்னைப் போல்) “நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இது மாதிரி இங்கு வந்து லஸ்ஸி அருந்தியிருக்கிறார்களா ?” என்று கேட்டதோடு அதை தனது மொபைல் போனிலும் பதிவு செய்தார்.

அதற்கு அவர், “ஆம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் தனது கடைக்கு வந்து லஸ்ஸி அருந்தியதாக கூலாக கூறினார்”.

அவரைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூடியிருந்த கூட்டம், உங்களுக்கு அமேதியைப் பற்றி லேட்டாக தான் தெரிந்திருக்கிறது என்பது போல சிரித்தனர்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத ஸ்ம்ரிதி இரானி, அஷ்ரபி லால் லஸ்ஸி கடையில் கொடுத்த குளு குளு லஸ்ஸியை அசடு வழிய மடக் மடக்கென குடித்துவிட்டு இடத்தைவிட்டு காலி செய்தார்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, ஸ்ம்ரிதி இரானியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.