எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. அமிதாப் பச்சன், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

“என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் இது. நான் ஒருபோதும் காணாத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. அதைப் பகிர்ந்த ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.