சென்னை: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக மாநில பாஜக பொதுச்செயலாளர்  கேடி.ராகவன் மீது  குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும்,  அவர்மீதான சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும்,  அவர்  தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர், சிவசங்கர் பாபாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி செய்வதாக, பாபாவின் சீடரான  நடிகர் சண்முகராஜா திடுக்கிடும் தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் முன்பு தெரிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி கேடி.ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கே.டி.ராகவன், பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…
நான் 30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்…
என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!
 என பதிவிட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி! நடிகர் சண்முகரா பகீர் தகவல்…