புதுடெல்லி:
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய மது கொள்கை தொடர்பாக நாளை காலை 11 மணியளவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது.