கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்த சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

“ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறந்த செயல்திறனை நிரூபித்திருப்பதை தரவுகள் காட்டுகிறது” என்று சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.

மேலும், “18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான தடுப்பூசியில் உள்ள அனைத்து பாதுகாப்பு சுயவிவரங்களும் 12 முதல் 15 வயதினருக்கான தடுப்பூசிக்கான பாதுகாப்பு சுயவிவரத்துடன் ஒத்துப்போகிறது” என்றும் அதில் தெரிவித்திருக்கிறது.

தற்போது மூன்று முதல் நான்கு வாரங்களாக உள்ள இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை, ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கிறது.