காங்டாங்:

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாய்சங்க் பூட்டியா. முன்னாள் கால்பந்து வீரரான இவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவர் காங்டாங்கில் ‘‘ஹம்ரோ சிக்கிம் கட்சி’’ என்ற புதிய கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.

இதில் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஆர்.பி.சுபா உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிக்கிம் வளர்ச்சி அடையாத மாநிலமாக உள்ளது. ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாயக கட்சியின் பெயரில் தான் ஜனநாயகம் உள்ளது. முதல்வர் பவன்குமார் சாம்ப்ளின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சியை நடத்துகிறார்.

மாநில மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவில்லை. ஆனால, வங்கதேசத்திற்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் ஆட்சி அமைத்தால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்’’ என்றார்.