பாட்னா:

பீகாரில் ஹவேலி காராக்பூர் ஏரி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்களை மாவோயிஸ்ட்டுகள் இன்று கடத்திச் சென்றுள்ளனர். எந்திரங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜிதேந்திர மிஸ்ரா கூறுகையில், ”50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் புகுந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். 4 பொக்லைன் எந்திரங்கள், 2 டிரக்குகள், டூவீலர்களையும் எரித்துள்ளனர். 4 தொழிலாளர்களை கடத்தி சென்றுள்ளனர். இதை தொடர்ந்து முங்கெர், ஜாமுய், லக்ஹிசராய் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.