லக்னோ: சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் சந்தையில்  ஒரு டோஸுக்கு ரூ .1,000 க்கு விற்கப்படும் என சீரம் நிறுவன தலைமை அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக,  ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த மருந்து பயனர்களுக்கு வழங்க இந்தியஅரசு சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி,  இந்திய அரசுக்கு ரூ.200 விலையில்  100 மில்லியன் டோஸ் வாங்கப்படுகிறது.  முதல்கட்டகமாக முன்களப்பணியாளர்களுக்கு  தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஐஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார், சீரம் நிறுவனம் முன்களப்பணியாளர்கள், ஏழைகள், சுகாதாரப் பணியாளர்களை ஆதரிக்க விரும்புகிறது. அதனால்தான் அதன் விலை ரூ.200 என்ற அளவில் அரசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

“இந்திய அரசைப் பொறுத்தவரை, நாங்கள் இன்னும் நியாயமான விலையை பராமரிப்போம், ஆனால் இது ரூ .200 ஐ விட சற்று அதிகமாக இருக்கும், இது எங்கள் செலவு விலை. எனவே, நாங்கள் தேசத்தையும் இந்திய அரசாங்கத்தையும் ஆதரிக்க விரும்பியதால், முதல் 100 மில்லியன் அளவுகளில் எந்த லாபத்தையும் ஈட்ட வேண்டாம் என்று முடிவு செய்தோம். ”

தற்போது தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல இந்திய சுகாதார அமைச்சகம்  அதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளது.  மேலும், லாரிகள், வேன்கள் மற்றும் குளிர் சேமிப்பகங்களுக்கான தனியார்  நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், -கோவிஷீல்டு தடுப்பு மருந்து,  தனியார் சந்தைகளில் ஒரு டோஸுக்கு ரூ .1000 க்கு விற்பனை செய்யப்படும் என்று  தெரிவித்தவர்,   “நாங்கள் ஒவ்வொரு மாதமும் 70-80 மில்லியன் டோஸ் செய்கிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து  திட்டமிடல் வகுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும், தங்களது கோவிஷீல்டு தடுப்பூசி, தங்கள் நாடுகளுக்கும் வழங்குமாறு கோரி பல நாடுகள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், “நாங்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறோம், இருந்தாலும், நமது மக்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்பதிலும் தீவிரமாக உள்ளோம் என்று  பூனவல்லா கூறினார்.