ப்பள்ளி

தவாத பாஜகவின் பி டீம் தான் ம ஜ த என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் நேற்று அம்மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்,

”தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அந்த கட்சி மதவாத கட்சியான பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நான் ஜனதாதளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் ‘பி-டீம்’ என்று கூறி வந்தேன்.  மதவாத கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஜனதாதளம் (எஸ்) கட்சி பா.ஜனதாவின் ‘பி-டீம்’தற்போது என்பதை நிரூபித்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று தேவேகவுடா கூறி இருக்கிறார். அவர் அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

ஆகஸ்டு மாதம் சரியாக மழை பெய்யாததால் விவசாயத்திற்காக மின் மோட்டார்களை அதிகமாக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். எனவே மாநிலத்தில் மின் தேவை அதிகரித்து இருப்பதால், வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது.  ஆயினும் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மின்சாரம் வழங்கப்படும்.

மத்திய அரசு மகதாயி நதியின் குறுக்கே கலசா-பண்டூரியில் அணைக்கட்டும் திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தயாராக உள்ளது..

விரைவில் காவிரி, மகதாயி, கிருஷ்ணா உள்ளிட்ட தேசிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பிரதமரைச் சந்தித்து முறையிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு நேரம் ஒதுக்குமாறு கூறி 3 வாரங்களுக்கு முன்பாகவே கடிதம் எழுதப்பட்டும் பிரதமரைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை”

எனக் கூறி உள்ளார்.