சிம்பு. ஸ்ருதிஹாசன் இருவருமே சுமார் ஒன்றரை வருடமாக நடிக்காமல் விலகி இருந்து வந்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். அதன் படப் பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நடந்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த கொரோனா லாக் டவுன் எப்போது முடியும் படக் குழுவினர் காத்திருக்கின் றனர்.


அதேபோல் ஒன்றரை வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஸ்ருதி ஹாசன் கடந்த ஆண்டு விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் இரண்டு படங் களில் நடிக்கிறார். தற்போது சிம்பு, ஸ்ருதியும் மிஷ்கின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


முன்னதாக விஷால் நடிக்கும் துப்பறி வாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கினார். அதில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே பட்ஜெட் பிரச்னை ஏர்பட்டது கருத்து வேறுபாடல் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க மறுத்து ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.