புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பிஜேபுர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பிரச்சாரம் நடந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கம்பாரியில் உள்ள பர்பாலி பிளாக் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது ஷூ வீசப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஷூ முதல்வரை தாக்காமல் தடுத்தனர்.

ஷூ வீசிய நபரை பிடித்து விசாரித்ததில், பத்மாபுர் பகுதியைச் சேர்ந்த கர்திக் மெஹர் என்றும் அவர் சட்டைப்பையில் பாஜக கொடி, அடையாள அட்டையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுது.

பிஜேபுர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் பாஜக பிரமுகர் ஆத்திரத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. முதல்வர் மீது நடந்த தாக்குதலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.